search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னையில் தரையிறக்கம்"

    சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து அந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #MedicalEmergency #ChennaiAirport
    சென்னை:

    துபாயில் இருந்து சிங்கப்பூர் நோக்கி தனியார் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு வந்தது. அந்த விமானம் இன்று காலை தமிழக வான் எல்லையில் பறந்தபோது, அதில் பயணித்த 48 வயது நிரம்பிய பயணி திடீரென நெஞ்சுவலியால் துடித்தார்.



    இதையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி, நிலைமையை எடுத்துக்கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார்.

    சென்னை விமான நிலையத்தின் அனுமதி கிடைத்ததும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த பயணிக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் மற்ற பயணிகளுடன் விமானம் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றது. #MedicalEmergency #ChennaiAirport
    ×